இன்று இங்கிலாந்து, தெ. ஆப்பிரிக்கா மோதல்
பிரிட்ஜ்டவுன்:உலகக் கோப்பை போட்டில் இங்கிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் இன்று மோதவுள்ளன. இதில் எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்பில் உள்ளனர்.
உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்று தற்போது நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன.
![]() |
இலங்கை அணியும் அரையிறுதிக்கு ஏறத்தாழ தகுதி பெற்று விட்டது.
இப்போது 4வதாக எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் 8 சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
இன்றைய போட்டி தான் தென் ஆப்பிரிக்காவுக்கு சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி. இதில் வென்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உண்டு.
![]() |
ஆனால் இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு போட்டி பாக்கியுள்ளது.
இப்போது தென் ஆப்பிரிக்கா 6 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 4 புள்ளிகளுடனும் உள்ளன. இன்றைய போட்டியில் இங்கிலாந்து வென்று விட்டால் தென் ஆப்பிரிக்காவும் இங்கிலாந்து தலா 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும்.
அதன் பின்னர் இரு அணிகளுக்கு இடையே ரன் விகிதத்தை பெறுத்தே அரையிறுதிக்கு எந்த அணி இடம் பெறும் என்று கூற முடியும்.
மாறாக தென் ஆப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டியாகும்.














Click it and Unblock the Notifications