ரயில்-பஸ் மோதல்: நாங்களா பொறுப்பு??
சென்னை:காஞ்சிபுரத்தில் நடந்த ரயில்-பஸ் மோதல் போன்ற விபத்துற்கு எல்லாம் ரயில்வே நிர்வாகம் பொறுப்பாக முடியாது என தென்னக ரயில்வே உதவிப் பொது மேலாளர் ராமநாதன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஆளில்லா லெவல் கிராங்சிங்குகளில் 1,100 உள்ளன. இதில் தற்போது 40 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற லெவல் கிராங்சில் ஒரு நாளைக்கு 6,000 வாகனங்கள் கடந்தால் மட்டுமே தானியங்கி கேட் அமைக்க முடியும்.
விபத்து நடந்த லெவல் கிராங்சிங்கில் 100க்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே செல்வதால் தானியங்கி கேட் அமைக்க முடியாது.
பொதுமக்கள் இது போன்ற தண்டவாளங்களை கடக்கும்போது கவனத்துடன் செயல்பட்டாலே விபத்துகளை தவிர்க்கலாம். ரயில் வந்துக் கொண்டிருக்கும்போது தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பதால்தான் விபத்து நடக்கிறது.
இதற்கெல்லாம் ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என்றார்.