இஸ்கான் மீது பக்தர்கள் சங்கம் சரமாரி புகார்
பெங்களூர்:கர்நாடக மாநிலத்தில் இஸ்கான் அமைப்பு நடத்தி வரும் அக்ஷய பாத்திரா மதிய உணவு திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்திருப்பதாக இஸ்கான் பக்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றழைக்கப்படும் இஸ்கான் அமைப்பு உலகம் முழுவதும் பல சமூகப் பணிகள் ஆற்றி வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உண்டு.
இந்த அமைப்பு பெங்களூரில் கர்நாடக அரசின் உதவியுடன் அம் மாநிலத்தில் உள்ள பல பள்ளிகளில் அக்ஷய பாத்திரம் என்ற மதிய இலவச உணவுத் திட்டத்தை நடத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவை இஸ்கான் வழங்கி வருகிறது.
பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த சமீபத்தில் இஸ்கான் அமைப்பு விருப்பம் தெரிவித்திருந்தது. இந் நிலையில், அக்ஷய பாத்திரத் திட்டத்தில் ெபருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பெங்களூர் இஸ்கான் பக்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் சத்யகோபிநாத் தாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், அக்ஷய பாத்திரத் திட்டத்தில் பெருமளவில் நிதி முறைகேடுள் நடக்கின்றன.
இஸ்கான் அமைப்பின் தலைவரான மது பண்டிட் தாஸ் இந்தத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்தபோதே, அவைெயல்லாம் வேண்டாம் என்று பக்தர்கள் சார்பில் கூறினோம்.
ஆனால் அப்படிக் கூறிய எங்களை மது பண்டிட் தாஸ் இஸ்கான் அமைப்பிலிருந்து நீக்கி விட்டார். நாங்கள் தற்ேபாது மது பண்டிட் தாஸால் பலியாக்கப்பட்டவர்கள்.
இஸ்கான் பெங்களூர் அமைப்பின் உண்மையான பக்தர்கள் நாங்கள்தான். ஆனால் மது பண்டிட் தாஸின் போக்கால் நாங்கள் இப்ேபாது அங்கு ேபாக முடியவில்லை.
ரியல் எஸ்டேட், சொத்துக் குவிப்பு ேபான்றவற்றில் மது பண்டிட் தாஸ் ஈடுபட்டு வருகிறார். அவர் செய்த தவறுகளுக்கு நாங்கள் பலியாகி விட்ேடாம் என்றார் கோபிநாத் தாஸ்.
மது பண்டிட் தாஸ் கேரளத்தை சேர்ந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications