யுஎஸ் துப்பாக்கி சூடு-மும்பை மாணவியும் பலி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்கடன்: அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் மும்பை சேர்ந்த மினாள் பாஞ்சல் என்ற மாணவியும் பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
அமெரிக்கா வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் தென் கொரியா மாணவர் துப்பாக்கியால் சுட்டத்தில் 32 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்குப் பின் அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்த குஜராத்தை சேர்ந்த மினாள் பாஞ்சல் என்ற மாணவி காணாமல் போனார். அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது.
இந் நிலையில் அவரும் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தையை இழந்த மினாள் தனது தாயாருடன் மும்பையில் வசித்து வந்தார். குஜராத்தை சேர்ந்தவரான இவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார்.
கல்லூரி அடையாள அட்டையை அணியாததால் மினால் பற்றிய தகவல் வெளியாக காலம் பிடித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பல்கலைக்கழகத்தில கட்டிடக் கலையில் முதுநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பயின்று வந்தார் மினாள் 26 வயதே ஆனவர். இங்கு வந்து 8 மாதங்கள் ஆகிறது.













Click it and Unblock the Notifications