லோகநாதன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
டெல்லி:அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான பேராசிரியர் ஜி.வி.லோகநாதனின் குடும்பத்தாருக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், 51 வயதாகும் லோகநாதன் விருது பெற்ற பேராசிரியர் ஆவார். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியற்காக பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் அவர் வென்றுள்ளார்.
![]() |
விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தின் டாப் 10 ஆசிரியர்கள் வரிசையில் அவரும் இடம் பெற்றவர்.
பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது சுடப்பட்டு அவர் இறந்தது பெரும் வேதனையைத் தருகிறது. மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இது.
லோகநாதனின் மனைவிக்கும், அவரது இரு குழந்தைகளுக்கும் என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் அனில் குப்தா மற்றும் கிஷன் வர்மா ஆகியோர் நேற்று இரவு விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்திற்குச் சென்றனர்.
அங்கு பெரும் பீதியில் உறைந்துள்ள 600க்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவியரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும், பேராசிரியர் லோகநாதனின் மனைவி உஷாவையும் அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்தியத் தூதர் ரோனன் சென்னின் அனுதாபச் செய்தியையும் உஷாவிடம் அவர்கள் வழங்கினர்.













Click it and Unblock the Notifications