காவல் நிலையத்தில் கள்ளக்காதல் மோதல்2 ஆயுதப் படை போலீஸார் சஸ்பெண்ட்
சென்னை: கள்ளக்காதல் விவகாரம் ெதாடர்பாக காவல் நிலையத்தில் வைத்து கிரிக்கெட் பேட்டால் அடித்துக் ெகாண்ட இரு ஆயுதப் படைக் காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கோகிலா என்ற பெண் காவலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கோகிலாவுக்கும், சென்னை ஆயுதப் படையைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி எஸ்.எம்.எஸ். மூலம் கள்ளக்காதலை பரிமாறிக் ெகாண்டனர்.
ரமேஷுக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கோகிலாவையும், ராஜேஷையும் அவர் கண்டித்தார். இதுெதாடர்பாக ரமேஷுக்கும், ராஜேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந் நிலையில், ராஜேஷ் திருத்தனி காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கே ரமேஷுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவரும் கிரிக்கெட் பேட்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் காவல் நிலையமே நாறிப் ேபானது.
திருத்தணி போலீஸார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தருமாறு மாவட்ட எஸ்பி ராஜேந்திரன் திருத்தணி இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் ெசய்தார் திருத்தணி இன்ஸ்ெபக்டர். அதன் அடிப்படையில் ரமேஷூம், ராஜேஷூம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications