போலி மனைவியுடன் கைதான பாஜக எம்பி:பணம் பெற்றுக் கொண்டு பெண்களைக் கடத்துபவர்!!
டெல்லி:மனைவியின் பாஸ்போர்ட் மூலம் வேறு ஒரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள குஜராத் மாநில பாஜக எம்.பி. பாபு பாய் கத்தாரா, பணம் பெற்றுக் கொண்டு பெண்களை வெளிநாடுகளுக்கு கொண்டு போய் விடும் வேலையை பல காலமாக செய்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்தைச் சேரந்த லோக்சபா உறுப்பினர் பாபுபாய் கத்தாரா. இவர் நேற்று காலை 7.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்தார். அவருடன் ஒரு பெண்மணியும், ஒரு சிறுவனும் உடன் வந்தனர்.
![]() |
இருவரையும் மனைவி, மகன் என்று கூறிக் கொண்டு விமானம் ஏற முயன்றார் பாபுபாய். ஆனால் அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த குடியேற்றத் துறை அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனையிட்டனர். அதில், அப்பெண்ணின் உண்மையான பெயர் பரம்ஜித் எனத் தெரிய வந்தது.
![]() |
ஆனால் பாபுபாயின் நிஜமான மனைவி சாதார பென்னின் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அவர் பயணம் செய்ய முயன்றுள்ளார். அதேபோல பாபுபாயுடன் வந்த சிறுவனும் அவரது மகன் அல்ல, மாறாக அமர்ஜீத் என்ற சிறுவன் ஆவான்.
இவர்களை கனடாவுக்கு கொண்டு போய் விடுவதற்காக பரம்ஜித்திடம் ரூ. 30 லட்சமும், அமர்ஜீத்திடம் ரூ. 35 லட்சம் பணமும் பெற்றுள்ளார் பாபுபாய்.
இதுபோல பணம் பெற்றுக் கொண்டு ஆட்களை வெளிநாடுளுக்கு கடத்துவதை அவர் தொழில் போல செய்து கொண்டு வந்துள்ளார். இதற்கு முன்பு 5 பெண்களை இவர் இவ்வாறு கடத்தியுள்ளாராம்.
பாபுபாய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications