லோகநாதன்-கோவை கல்லூரியில் கண்ணீர் அஞ்சலி
கோவை:அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் பலியான பேராசிரியர் லோகநாதனுக்கு கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. லோகநாதன் இந்தக் கல்லூரியிலும் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் லோகநாதன் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் 1976ம் ஆண்டு பி.இ. சிவில் என்ஜீனியரிங் பட்டப்படிப்பை படித்தவர். அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் மறைந்த தங்களது முன்னாள் மாணவருக்கு பி.எஸ்.ஜி. கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் இரங்கல் கூட்டம் நடத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கல்லூரி முதல்வர் ருத்ரமூர்த்தி, சிவில் என்ஜீனியரிங் பிரிவு தலைவர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் இதில் கலந்து ெகாண்டு 2 நிமிடம் மெளன அஞ்சலி ெசலுத்தினர்.
பேராசிரியர் லோகநாதன் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் திறம்பட விளங்கியவர் என்று முதல்வர் ருத்ரமூர்த்தி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications