மினால் உடலும் அமெரிக்காவிலேயே அடக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த இந்திய மாணவி மினால் பன்சாலின் உடலும் அமெரிக்காவிலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.
விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் தென் கொரிய மாணவர் சோ சியூங் ஹூ நடத்திய துப்பாக்கி சூட்டில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதனும், குஜராத்தை சேர்ந்த மாணவி மினால் பன்சாலும் அடங்குவர்.
மினால், மும்பையில் உள்ள ரிஸ்வி கட்டடக் கலைக் கல்லூரியில் ப.ஆர்க் படித்தவர். மேல் படிப்புக்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில சேர்ந்தார்.
மினால் பன்சாலின் தாயார் தற்போது அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவரது மூத்த மகள் நியூ ஜெர்சியில் தனது கணவருடன் வசித்து வருகிறார். அவரைப் பார்க்க வந்த இடத்தில் தனது இளைய மகளைப் பறிகொடுத்துள்ளார் மினாலின் தாயார். மினாலுக்குத் தந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மினாலின் உடல் நாளை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் சனிக்கிழமை அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications