ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு: மே 9ம் தேதி தீர்ப்பு
சென்னை:சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு மே 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி குண்டு வெடித்தது. இதில் அலுவலகம் தரைமட்டமானது. 11 பேர் பலியானார்கள்.
இந்த வழக்கை முதலில் தமிழக போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, இமாம் அலி, ஹைதர் அலி, பழனி பாபா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவர்களில் முஸ்டாக் அமகது என்பவரைத் தவிர மற்ற 17 பேரும் கைது செய்யப்பட்டனர். முஷ்டாக் அகமது இன்னும் தலைமறைவாக உள்ளார். வழக்கு விசாரணையின் போது பழனிபாபா கொல்லப்பட்டார். இமாம் அலி என்கவுண்டர் மூலம் பெங்களூரில் கொல்லப்பட்டு விட்டார்.
இதையடுத்து 15 பேர் மீது சென்னை 2வது தடா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. கடந்த 1994ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1995ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது.
இதையடுத்து மே 9ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ராமசாமி அறிவித்தார். வழக்கில் கைது செய்யப்பட்ட பாட்ஷா உள்ளிட்ட 8 பேர் சிறையில் உள்ளனர். மற்ற 7 பேரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
காங்கிரஸ், தேமுதிகவுக்கு திமுக வாரி வழங்கியாச்சு! எங்களுக்கு ஒரு நியாயம்? சீறிய CPIM சண்முகம் -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு











Click it and Unblock the Notifications