சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டம்- டேக் ஆப் ஆகுமா?
சென்னை:சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு பட்டேல் ஏற்க மறுத்து விட்டார்.
சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு விமான நிலையத்தின் அருகே உள்ள 1,457 ஏக்கர் நிலத்தை இலவசமாக தருவதாக கடந்த 2005ம் ஆண்டு அறிவித்தது.
இதற்காக சென்னை விமான நிலையம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியை அரசு தேர்வு செய்தது. ஆனால் இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக பல்வேறு மாற்று திட்டங்களை தமிழக அரசு தயாரித்தது. ஆனால் அதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.
தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யமால் புதிய விமான நிலையம் அமைக்கலாம் என பல்வேறு அரசியில் கட்சிகளும், அமைப்புகளும் யோசனை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்காலிக தீர்வாக சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக ஒரு ஓடுபாதையை அமைக்க தமிழக அரசு 832 ஏக்கர் நிலத்தை கொடுப்பதாக அறிவித்தது.
இதற்கான விரிவான அறிக்கையும் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது.
இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் சென்னை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தமிழக அரசு தயாரித்த திட்டத்தை தமிழக அரசு அதிகாரிகள் விளக்கினர்.
ஆனால் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு பட்டேல் திட்டம் தெளிவாக இல்லை எனக் கூறி அத்திட்டத்தை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications