சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டம்- டேக் ஆப் ஆகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு பட்டேல் ஏற்க மறுத்து விட்டார்.

சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக தமிழக அரசு விமான நிலையத்தின் அருகே உள்ள 1,457 ஏக்கர் நிலத்தை இலவசமாக தருவதாக கடந்த 2005ம் ஆண்டு அறிவித்தது.

இதற்காக சென்னை விமான நிலையம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியை அரசு தேர்வு செய்தது. ஆனால் இதற்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக பல்வேறு மாற்று திட்டங்களை தமிழக அரசு தயாரித்தது. ஆனால் அதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.

தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யமால் புதிய விமான நிலையம் அமைக்கலாம் என பல்வேறு அரசியில் கட்சிகளும், அமைப்புகளும் யோசனை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்காலிக தீர்வாக சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக ஒரு ஓடுபாதையை அமைக்க தமிழக அரசு 832 ஏக்கர் நிலத்தை கொடுப்பதாக அறிவித்தது.

இதற்கான விரிவான அறிக்கையும் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியது.

இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதில் சென்னை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக தமிழக அரசு தயாரித்த திட்டத்தை தமிழக அரசு அதிகாரிகள் விளக்கினர்.

ஆனால் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு பட்டேல் திட்டம் தெளிவாக இல்லை எனக் கூறி அத்திட்டத்தை ஏற்க மறுத்து விட்டார்.

இதனால் சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+