பெண் கடத்தல் பாஜக எம்பி-ஆய்வுக்குள்ளாகும்எம்.பிக்களின் வெளிநாட்டு பயணங்கள்
டெல்லி:மனைவி பெயரில் வேறு பெண்ணை வெளிநாட்டுக்கு கடத்த முயன்று பாஜக எம்.பி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எம்.பிக்கள் தனிப்பட்ட முறையில் வெளிநாடுகளுக்குச் சென்றது குறித்து விரிவாக ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா நேற்று முன்தினம் காலை டெல்லி விமான நிலையத்தில் மனைவி பாஸ்போர்ட்டில் வேறு ெபண்ணுடன் கனடாவுக்கு செல்ல முயன்று பிடிபட்டார். அவர்களுடன் போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற ஒரு சிறுவனும் பிடிபட்டான்.
மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் கத்தாராவை 11 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸுக்கு டெல்லி கூடுதல் மெட்ரோபாலிடன் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
கத்தாராவுடன் போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற பெண் பரம்ஜீத் கவுருக்கு 5 நாள் காவல் கொடுக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் வெளிநாடுளுக்கு ஆட்களைக் கடத்தும் கும்பலுடன் கத்தாராவுக்கு ெதாடர்பு இருப்பது ெதரிய வந்துள்ளது. இதற்கு முன்பு பலரைக் கடத்தியுள்ள கத்தாரா, ஏராளமான போலி பாஸ்ேபார்ட்டுகளையும் வைத்துள்ளாராம்.
அவரைப் போலவே மேலும் சில எம்.பிக்களும் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அனைத்து எம்.பிக்களின் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தீவிரமாக ஆராய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.