காவிரி: கேரளாவும் உச்சநீதிமன்றம் செல்கிறது
திருவனந்தபுரம்: கர்நாடகத்தைத் ெதாடர்ந்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யத் திட்டமிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில், முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இதுதொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன், இக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்வது என்றும், தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்க நடுவர் மன்றத்திடம் மனு தாக்கல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
காவிரி மொத்த நீரில் கேரளாவின் பங்களிப்பு 147 டிஎம்சியாக இருக்கும்போது, நடுவர் மன்றம் 30 டிஎம்சி நீரை மட்டும் வழங்கியது கேரளாவிற்கு எதிரானது.
உபரி நீரை மற்ற மாநிலங்கள் எப்படி பகிர்ந்து கொள்ளும் என்பதை நடுவர் மன்றம் தெளிவாக கூறவில்லை. உச்சநீதிமன்றம் கூறிய பின்னும் முக்காலி திட்டம் குறித்து தீர்ப்பில் எதுவும் குறிப்பிட படவில்லை என்றார் அவர்.