காஞ்சிபுரம்: கார்-பஸ் மோதலில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:மாமல்லபுரம் கடற்கரை சாலையில் அரசு பேருந்தும் காரும் மோதியதில் 3 பேர் பலியாயினர்.
கடலூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(50), கார்த்திகேயன்(45), சுஜாதா(40) ஆகியோர் காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அருண் என்பவர் காரை ஓட்டி வந்தார்.
மாமல்லபுரம் கடற்கரை சாலையில், சென்னையிலிருந்து கடலூர் சென்றிருந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது இந்த கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தீயணைப்பு படையினர் வந்து இடிபாடுகளிடையே சிக்கிய உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். டிரைவர் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications