2 நாட்களில் ரூ.1,600 கோடி தங்கம் விற்பனை
சென்னை:தமிழகத்தில் அட்சய திரிதியையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் 20 டன் தங்கம் அதாவது ரூ.1600 கோடி மதிப்புள்ள தங்கம் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்சிய திரிதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் வளம் பெருகும் என்ற நம்பிக்கை கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு அட்சயதிரிதியை 2 நாட்களுக்கு நீடித்தது. வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்த இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி நகை விற்பனை படு சூடாக இருந்தது.
நகைக் கடைகளில் மட்டுமல்லாது இந்த ஆண்டு முதல் முறையாக பல வங்கிகளில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டன.
அட்சய திரிதியை விற்பனை மட்டும் 20 டன் தங்கம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ரூ. 1600 கோடி அளவிலான தங்கம் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இது 25 சதவீதம் அதிகம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications