கடத்தப்பட்ட தமிழக என்ஜீனியர் பத்திரமாக மீட்பு
கடலூர்:நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக என்ஜீனியர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். சிவில் என்ஜீனியரான ராமச்சந்திரன் நைஜீரியாவில் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவர் பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் சிலர் கடத்திச் சென்றுவிட்டனர்.
இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ராமச்சந்திரனை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு அவர்கள் தந்திகள் அனுப்பினர்.
இந்த நிலையில், ராமச்சந்திரனை மீட்க இந்தியத் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராமச்சந்திரன் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனம், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட ராமச்சந்திரன் நேற்று தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசினார். தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட ராமச்சந்திரன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications