பி.எஸ்.எல்.வி.-சி8 நாளை ஏவப்படுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னைவர்த்தக ரீதியிலான முதலாவது முழுமையான பி.எஸ்.எல்.வி- சி 8 ராக்கெட் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. வரிசையில் இது 11வது பயணம். நாளை ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. -சி 8 ராக்கெட்டில் இத்தாலியின் ஏஜில் செயற்கைக்கோளும், இஸ்ரோவின் ஏவியானிக்ஸ் கருவியும் விண்ணில் செலுத்தப்படவுள்ளன.
![]() |
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2வது ஏவுதளத்திலிருந்து நாளை 3.30மணிக்கு பி.எஸ்.எல்.வி. -சி8 விண்ணில் ஏவப்படவுள்ளது.
இற்கான கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. அனைத்து ஏற்பாடுகளும் சுமூகமாக போய்க் கொண்டிருப்பதாகவும் திட்டமிட்டபடி நாளை மாலை பி.எஸ்.எல்.வி விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ள இத்தாலிய செயற்கைக்கோளின் எடை 352 கிலோ ஆகும். இஸ்ரோ அனுப்பும் மேம்படுத்தப்பட்ட ஏவியானிக்ஸ் கருவியின் எடை 185 கிலோவாகும்.













Click it and Unblock the Notifications