80 ஆண்டு கோவில் இடிப்பு-நாகையில் பரபரப்பு
நாகப்பட்டனம்:நாகப்பட்டனம் மாவட்டம் ஆத்தூர் அருகே 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை சில விஷமிகள் பொக்லைன் இயந்திரத்தை வைத்து தரைமாக்கிய செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் அருகே மாத்தூர் ரோடு சந்திப்பில், உத்திராபதியார் கோவில் என்ற கோவில் உள்ளது. இந்தக் கோவில் கிட்டத்தட்ட 80 ஆண்டுளாக இங்கு உள்ளதாம்.
புத்திர பாக்கியம் வேண்டுவோர் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்வது வழக்கம். தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வருவர். மார்கழி மாதத்தில் இங்கு பத்து நாள் விழா நடைபெறும்.
இந்த நிலையில் இன்று காலை கோவில் இருந்த இடத்தில் வெறும் சம தளம் மட்டுமே இருந்ததைப் பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவு சிலர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து கோவிலை தரைமட்டமாக்கி விட்டு, இடிபாடுகளையும் கூடவே அள்ளிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இந்த செயலை யார் செய்தது என்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications