விபசார கும்பலிடம் சிக்கிய மதுரை பெண்
சென்னை: செனனையில் வேலை பார்த்து வரும் கணவரை சந்திக்க மதுரையிலிருந்து உறவினருடன் வந்த பெண், விபச்சார கும்பலிடம் சிக்கினார். அவரை போலீஸார் மீட்டனர்.
மதுரையை சேர்ந்தவர் பானு (24). இவரது கணவர் சென்னையில் வேலை பார்க்கிறார். அவரைக் காண்பதற்காக உறவினர் முருகன் என்பவருடன் சென்னைக்கு வந்தார் பானு.
ஆனால் கணவர் எங்கு வேலை செய்கிறார் என்பது தெரியாமலும், அவரைப் பார்க்க முடியாமலும் ஏமாற்றமடைந்தார். இதனால் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் இருவரும் அறை எடுத்துத் தங்கினர்.
அவர்களைப் பார்த்த ஒரு விபச்சார புரோக்கர் பானுவை விபச்சாரத்தில் தள்ள திட்டமிட்டார். முருகன் வெளியே போயிருந்த சமயமாக பானுவை அணுகிய அந்த புரோக்கர், உனது கணவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியும். நான் கூட்டிச் செல்கிறேன் என்று கூறி அழைத்துள்ளார்.
அதை உண்மை என்று நம்பிய பானு, முருகனுக்குக் கூட தெரிவிக்காமல் அந்த புரோக்கருடன் கிளம்பிச் சென்றார். நேராக தாம்பரத்திற்குக் கூட்டிச் சென்ற புரோக்கர், ஒரு வீட்டில் பானுவைத் தங்க வைத்துள்ளார்.
பின்னர் அவரைக் குளித்து விட்டு தயாராக இருக்குமாறும், பிறகு உனது கணவரைப் பார்க்கப் போகலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பானும் குளிக்கப் போயுள்ளார். அப்போது அவருக்குத் தெரியாமல் பானு குளிப்பதை படம் எடுத்துள்ளார்.
பின்னர் அந்தப் படத்தைக் காட்டி பானுவை கட்டாயப்படுத்தி பலருடனும் விபச்சாரம் செய்ய வைத்துள்ளார். இதன் மூலம் வருமானம் கிடைக்கவே அதைத் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் விபச்சார தடுப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் அந்த புரோக்கர் சிக்கினார். அவரது பெயர் பன்னீர் செல்வம் என தெரிய வந்தது.
தஞ்சையில் பழக்கடை என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்துள்ளதும் தெரிய வந்தது. பன்னீர்செல்வத்துடன் அவரது கூட்டாளி அமல்ராஜன் என்ற பாபுவையும் போலீஸார் கைது செய்தனர்.
பானு மற்றும் சவீதா என்ற இன்னொரு பெண்ணையும் போலீஸார் மீட்டனர்.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்












Click it and Unblock the Notifications