இந்திய வீரர்கள் தேர்வு-இனி, சுழற்சி முறையில்..
மும்பை:இந்திய கிரிக்கெட் வீரர்கள் இனி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என முன்னாள் இந்திய அணி வீரரும், இந்திய தேர்வுக்குழு தலைவருமான வெங்சர்கார் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்த மாதம் வங்காள தேசத்தில் சுற்றுபயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் ஒரு நாள் போட்டியில் இருந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும், கங்குலியும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னாள் வீரர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வங்காளதேச தெடாருக்கான அணி தேர்வு குறித்து வெங்சர்க்கார் கூறியதாவது,
அனுபவம் வாய்ந்த கேப்டன் தலைமையில் இளம் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, வாரிய செயலாளர் நிரஞ்சன் ஷா எங்களுக்கு கடிதம் அனுப்பினார்.
அதன் அடிப்படையிலும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சரத்பாவர் சிறந்த அணியை தேர்வு செய்யும்படியும் கேட்டுக்கொண்டதான் படியும் தான் நாங்கள் வீரர்களை தேர்வு செய்தோம்.
இதில் எந்தவிதமான அறிவுறுத்தலும் இல்லை. சச்சினும், கங்குலியும் மிகச் சிறந்த வீரர்கள். இருவரும் இந்திய அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளனர். அவர்களை அணியில் நீக்கப்பட்டார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.
வரும் காலக்கட்டத்தில் இந்திய அணி 45 ஒரு நாள் போட்டியிலும், 15 டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.
எனவே சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவத்தை பொறுத்து வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் சச்சினுக்கும், கங்குலிக்கும் வங்கதேச சுற்றுப்பணத்திற்கு இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக இருந்தால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்காது. இது டிராவிட்டுக்கும் பொருந்தும்.
இனி வரும் போட்டிகளில் அனைத்து வீரர்களும் சுழற்சி முறையில் ஓய்வு கொடுக்கப்படும். ஒரு வீரர்கள் ஒரு ஆண்டில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது என்பது சாத்தியமற்றது. எனவே இனி வரும் போட்டிகளில் வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும்.
பார்மை இழந்து தவித்து வரும் ஹர்பஜன் சிங், பதான், அகார்கர் ஆகியோர் தங்களது திறமையை நிரூபித்தால் அடுத்து வரும் தொடரில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
வங்கதேசத் தொடரில் டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் தெடாக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். கார்த்திக் திறமையான பேட்ஸ்மேன் அவர் எந்த நேரத்திலும் தைரியமாக விளையாடக் கூடியவர். அதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடிய விதமே சிறந்த சான்றாகும் என அவர் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications