2 ஆசிரியர் பயிற்சி மாணவிகள் தற்கொலை:பள்ளி நிர்வாகிகள் - வார்டன் தலைமறைவு
வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்த இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்தப் பள்ளியின் நிர்வாகிகளும், வார்டனும் தலைமறைவாகி விட்டனர்.
திருப்பத்தூரில் உள்ள தனியார் அசிரியர் பயிற்சி நிறுவனத்தில், ெபரம்பலூரைச் ேசர்ந்த ஷீபா, கிருஷ்ணகிரியைச் ேசர்ந்த ஷோபா மேரி ஆகிய இருவரும் படித்து வந்தனர்.
இருவருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக சக மாணவிகள் விடுதி காப்பாளர் ஜில்டாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஜில்டா தலைமை நிர்வாகி ஜாஸ்மினிடம் இதுகுறித்து தகவல் கொடுத்தார்.
இதையடுத்து நிர்வாகம் இரு மாணவிகளின் பெற்றோர்களையும் வரவழைத்து அவர்களிடம் மாணவிகளை வேறு விடுதியில் சேர்க்குமாறு கூறினார்கள்.
இதனால் மனமுடைந்த இருவரும் திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து இரு மாணவிகளையும் தற்கொலை செய்து ெகாள்ளத் தூண்டியதாக ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் ஜாஸ்மின், முதல்வர் மைக்கேல், விடுதி காப்பாளர் ஜில்டா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதை அறிந்த மூவரும் தலைமறைவாகி விட்டனர். மூவரையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications