ஹசீனா நாடு திரும்ப வங்கதேசம் தடை
Subscribe to Oneindia Tamil
லண்டன்:முன்னாள் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தாய்நாடு திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
![]() |
லண்டன் சென்ற ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டுக்குள் நுழைய அந் நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. இதனால் வங்கதேசம் செல்லும் விமானத்தில் ஏற வந்த அவர் இறக்கிவிடப்பட்டார்.
இதுகுறித்து பிரிட்டிஷ் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,
லண்டனிருந்து வங்க தேசத்திற்கு செல்ல முன்னாள் பிரதமர் ஹசீனாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசு இந்த தடையை விதிக்கவில்லை. அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர். அதனால் அவர் இங்கிருந்து அவர் தாய்நாடு செல்ல நாங்கள் தடை விதிக்க முடியாது என்றார்.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகாரிகள் கூறுகையில்,
வங்காள தேசத்திற்கும் வரும் அனைத்து விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வங்க தேசத்திடமிருந்து எங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் செல்ல நாங்கள் அனுமதிக்கவில்லை என்றார்.
இந்தத் தடையால் ஷேக் ஹசீனா லண்டனில் தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார்.













Click it and Unblock the Notifications