வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி சி8
சென்னை:இத்தாலிய செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி8 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய ராக்கெட் துறையில் இன்று மிகவும் முக்கியமான நாளாகும். வர்த்தக ரீதியில் முதல் முதலாக இன்று பி.எஸ்.எல்.வி. சி8 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இத்தாலியின் ஏஜைல் செயற்கைக்கோள் மற்றும் இஸ்ரோவின் அட்வான்ஸ்ட் மாட்யூல் ஆகியவற்றை சுமந்து கொண்டு பயணத்திற்குத் தயாராக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் பி.எஸ்.எல்.வி சி8 நிலை நிறுத்தப்பட்டது.
![]() |
நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு கவுண்ட்டவுன் தொடங்கியது. இன்று மாலை 3.30மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி 8 விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிட்டபடி பி.எஸ்.எல்.வி. சி8 விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதையடுத்து விஞ்ஞானிகள் அனைவரும் ஆரவாரத்தோடு கைகளைத் தட்டியும், கட்டிப் பிடித்தும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
ராக்கெட்டில் இருந்த இரு செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி அவற்றுக்குரிய புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டன.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications