இந்த ஆண்டு 27% இட ஒதுக்கீடு இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லிஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இந்த ஆண்டு இந்த கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமலாக்கவும் தடை விதித்துவிட்டது.

ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையை நீக்க கோரி மத்திய அரசு கடந்த 18ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை 23ம் தேதி ஒத்தி வைத்தது.

அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில நீதிபதி அரிஜித் பசாயத், கோகேஷ்வர் சிங் பாந்தா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாங்கள் விதித்த தடையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் தடை விதிக்கிறாம் என்றனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜூன் சிங் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இன்றைய விசாரணை வரை காத்திருக்கப் போதாகவும், அதன் பிறகும் பொறுமையாக இருக்க முடியாது எனவும், மாணவர் சேர்க்கை தொடர்பாக தன்னிச்சையாக முடிவு எடுக்க நேரிடும் எனவும் ஏற்கனவே ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+