சேது சமுத்திர பணிக்கு மேலும் 2 கப்பல்கள்!
ராமேஸ்வரம்:சேது சமுத்திர திட்ட பணிக்காக இரண்டு கப்பல்கள் ராமேஸ்வரம் வந்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கி, கடலை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வேதாரண்யம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆதாம் பாலத்தை இடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக இப்பணியில் ஈடுபட்டிருந்த கப்பலும், அதில் பொருத்தப்பட்டிருந்த மண் அள்ளும் கிரேனும் பழுதானது. இதையடுத்து இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமர் பாலத்தை இடிக்க கூடாது என்றும், ராமர் பாலத்தை இடிக்கும் பணியை மே 13ம் தேதிக்குள் கைவிட வேண்டும் என்றும் விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது.
இந்நிலையில் சேது சமுத்திர திட்ட கல்வாய் தோண்டும் பணிக்காக இந்திய அகழ்வு கழகத்தை சேர்ந்த அக்வரிஸ் கப்பலும், 7 எக்ஸ் என்ற சிறிய கம்பலும் நேற்று ராமேஸ்வரம் வந்தது. 7 எக்ஸ் என்ற கப்பல் எரிபொருள் மற்றும் குடிநீர் எடுத்து செல்ல பாம்பன் குந்துகால் கடல் பகுதிக்கு வந்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் இந்த கப்பல் மணல் தோண்டும் பணிக்காக தனுஷ்கோடி கடல் பகுதிக்கு செல்லவுள்ளது.












Click it and Unblock the Notifications