துபாயில் தமிழக கூலி தொழிலாளி கொலை

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:துபாயில் பணியாற்றி வந்த தமிழக கூலி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பரமகுடியை அடுத்த மஞ்சள்பட்டினத்தை சேர்ந்த சங்கிலி(38) கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த 2005ம் ஆண்டு துபாய் சென்று கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

கடைசியாக கடந்த மாதம் 7ம் தேதி தொலைபேசியில் தனது மனைவி லட்சுமியுடன் பேசியுள்ளார். அதன் பின்னர் துபாயில் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வந்தது.

இந்த செய்தி வந்த 4 நான்கு நாட்களுக்கு பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது கையில் இரட்டை இலை சின்னமும், சங்கிலி என்றும் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து நண்பர்கள் அவரது உடலை அடையாளம் காட்டினர்.

இது குறித்து அவர் வேலை பார்த்த நிறுவனத்திடம் கேட்டபோது அங்கிருப்பவர்கள் தகவல் கூற மறுத்து விட்டனர்.

இதுகுறித்து எழுத்துபூர்வமான தகவல் நிறுவனத்திடமிருந்தோ அல்லது துபாய் காவல்துறையிடமிருந்தோ லட்சுமிக்கு வரவில்லை. துபாயிலுள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் அனுப்பப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+