தமிழகத்தில் சாப்ட்வேர் துறை 25% வளர்ச்சி
சென்னை:தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் தமிழகம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாக இந்திய தொழிலக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலக சம்மேளனத்தின் தென் பிராந்திய கிளை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 அக்டோபர் முதல் 2007 மார்ச் வரையிலான கால கட்டத்தில் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகள் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பத் துறை 25 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாக துறை 18 சதவீத உற்பத்தியை பெருக்கியுள்ளது.
தமிழக பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, சர்க்கரை, வேதிப் பொருட்கள் மற்றும் உரம் ஆகிய துறைகளே.
அக்டோபர் 2006 முதல் மார்ச் 2007 வரையிலான கால கட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில், 20 சதவீத அளவுக்கு லாபம் அதிகரித்துள்ளது. மேலும் இத்துறையில் வேலைய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அடுத்த 6 மாதங்களில் இத்துறை மேலும் நல்ல வளர்ச்சியைப் பெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது 35 சதவீத வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications