மணமகன் திடீர் ஓட்டம்-மணமகள் தவிப்பு
சென்னை:திருமண நேரத்தில் மணமகன் ஓடியதால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியின் மகள் ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கும் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த வேலு என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
நேற்று இரவு சென்னை புளியந்தோப்புவில் உள்ள ஜெயின் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்தது.
ஆனால் பெண் வீட்டார் இரவு 10 மணிக்கு மேல் தான் வந்தனர். இதனால் மண்டபத்திற்கு வந்த பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை வீட்டார் சரியாக பேசவில்லை.
இந் நிலையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணிக்குள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமேடைக்கு மணப்பெண் வந்து அமர்ந்தார். ஆனால் மாப்பிள்ளை திருமண மண்டபத்தில் இருந்து எங்கே எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாலசுப்பிரமணி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலுவுக்கும் என் மகள் ஜோதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வரதட்சணையாக 20 பவுன் நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர்.
அதற்கு நாங்கள் 10 பவுன் நகையும், மோட்டார் சைக்கிளும் தருவதாக ஒப்புக்கொண்டோம். இதற்கு அவர் அப்போது ஒத்துக்கொண்டனர். ஆனால் தற்போது கூடுதல் வரதட்சணை கேட்கிறார்கள்.
இதனால் திருமணத்தை நிறுத்தும் நோக்கில் மாப்பிள்ளையை அவர் எங்கோ அனுப்பிவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல மணமகன் தாயார் ஆறுமுகமும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் நாங்கள் கூடுதல் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை, நேற்று இரவு பெண் வீட்டார் காலதாமதமாக வந்ததால் என் மகன் பொறுமை இழந்து எங்கோ ஓடி வீட்டான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கிண்டி மேம்பாலத்தில் கைமாறிய 1.5 கிலோ தங்கம்.. சென்னை ஜிஎஸ்டி ஆபீசர் யாருனு பார்த்தால்? செம ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க!












Click it and Unblock the Notifications