வெடிவிபத்து: கிட்டங்கி உரிமையாளருக்கு குண்டாஸ்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செந்தூரில் நடந்த வெடிவிபத்தில் கைது செய்யப்பட்ட வெடிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர் சேகர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம் அருகே செந்தூர் என்ற இடத்தில் கடந்த 7ம் தேதி வெடிபொருட்களுடன் அஜாக்கிரதையாக சென்ற ஜீப் வெடித்துச் சிதறியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வெடிபொருட்களை விற்ற, புதுவை மாநிலம் மணலூர்ப்பேட்டையைச் சேர்ந்த சேகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தற்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கான உத்தரவு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேகரிடம் காட்டப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications