நல்ல சரக்கு வந்தால் கள்ளச்சாராயம் ஒழியும்-கருணாநிதி
சென்னை:கள்ளச்சாராயத்தை ஒழிக்க இயலாது. அதை ஒழிக்க நல்ல சரக்காக உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இதுகுறித்து கருணாநிதி கூறுகையில், கள்ளச்சாரம் என்பது ஒழிக்க முடியாதது. காமராஜர் ஆட்சியிலேயே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை.
சாராயத்துக்கு எதிராக போராடிய மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரில் அவரது வீட்டுக்கு அருகேயே பெரிய கிணறு தோண்டி கள்ளச்சாராயம் காய்ச்சியதாக நாடாளுமன்றத்தில் ஒருமுறை இந்திராகாந்தி வருத்தப்பட்டுக் கூறினார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க, நல்ல சரக்குகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதுதான் ஒரே வழி. பாமகவினர் கூறியது போல மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வந்தால் அரசுக்கு ரூ. 7,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.
நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று மதுவிலக்கு திட்டத்தை அமுல் படுத்தினால் டாஸ்மாக் கடைகளில் வேலை பார்ப்பவர்களை என்ன செய்வது.
கள்ளச்சாராயம் பெருகி விட்டதாக அதிமுகவினர் கூறியுள்ளனர். கடந்த ஆட்சியில் 134 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். 387 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சியில் ஒருவர் தான் உயிரிழந்துள்ளார்.
அதற்காக நான் கள்ளச்சாராயத்துக்கு ஆதரவு தருவதாக நினைக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். கள்ளச்சாராய குற்றத்துக்கு கடும் தண்டனை அளிக்க இந்த அரசு தயராக இருக்கிறது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications