For Daily Alerts
Just In
காணாமல் போன மீனவர் குடும்பங்களுக்குமாதம் ரூ. 1500 நிதியுதவி
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் காணாமல் போன 12 மீனவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக மாதாமாதம் ரூ.1,500 வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து கருணாநிதி பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடிக்கப் போன போது காணாமல் போய் விட்டனர்.
அவர்கள் திரும்பி வரும் வரை அவர்களது குடும்பங்களை அரசே பராமரிக்கும் என அறிவித்திருந்தேன். அதன்படி இந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ. 1500 நிதியுதவி அளிக்கப்படும்.
இவர்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது என்றார் முதல்வர் கருணாநிதி.
Comments
karunanidhi கருணாநிதி government tamil nadu சட்டசபை missing thatstamil family முதல்வர் fishermen aid கன்னியாகுமரி மீனவர் நிதியுதவி tamilnadu tamil news குடும்பங்கள்
Story first published: Friday, April 27, 2007, 5:30 [IST]