For Daily Alerts
Just In
மகாமக குளத்தில் மிதந்து வந்த சுவாமி சிலைகள்
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் 7 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்பகோணம் மாகமக குளத்தின் தென்கரையில் சிலைகள் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து விரைந்த போலீஸார், சிலைகளை வெளியில் எடுத்தனர்.
அதில் 3 அம்மன் சிலைகள் உள்பட 7 சிலைகள் இருந்தன. இவை அரை அடி முதல் ஒன்றேகால் அடி உயரமும், 5 கிலோ வரை எடை கொண்டதாகவும் இருந்தன. இவை அனைத்தும் பித்தளை சிலைகள்.
இந்த சிலை குளத்திற்கு எப்படி வந்தது என்பது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments
tamil nadu kumbakonam கும்பகோணம் விசாரணை inspector இன்ஸ்பெக்டர் thatstamil வழக்கு ராஜா tamilnadu tamil news pond mahamaham local body election tn political investication
Story first published: Friday, April 27, 2007, 5:30 [IST]