அப்சல் விவகாரம்-ஐரோப்பிய யூனியன் கவலை
டெல்லி:நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சல் குரு விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியன் தன்னிடம் கவலை தெரிவித்ததாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விட்டு டெல்லி திரும்பிய கலாம், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஸ்டிராஸ்பர்க் நகரில் நான் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் பேசச் சென்றபோது அப்சல் விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் என்னிடம் பேசினர். தூக்குத் தண்டனை குறித்து கவலை தெரிவித்தனர்.
இந்த விஷயத்தில் ஐரோப்பிய யூனியன், இந்தியாவை நிர்ப்பந்தப்படுத்துவதாக கூற முடியாது. அந்தக் கேள்விக்கே இடமில்லை. சட்டப்படி இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்பதை நான் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.
அப்சல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கருணை மனு மீது சட்ட நிபுணர்கள் கொடுக்கும் கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications