சென்னை நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பேசியுள்ளார்.
அதில் பேசிய நபர், தோஹாவிலிருந்து சென்னைக்கு வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு மனித வெடிகுண்டு பயணிப்பதாகவும், விமான நிலையத்திற்கு வந்ததும் அந்த மனித வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மறு முனையில் பேசியவர் கூறியுள்ளார்.
இதையடுத்து இத்தகவலை கர்நாடக டிஜிபிக்கு அந்த சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அவர் தமிழக டிஜிபிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அண்ணா பன்னாட்டு முனையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டிஜிபி முகர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தோஹாவிலிருந்து 177 பயணிகளுடன் அந்த விமானம் தரையிறங்கிதும், பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. விமானத்தில் குண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து பயமிகள் அனைவரையும் இறக்கிய பின்னர் விமானம் முழுவதும் முழுமையாக ேசாதனையிடப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அத்தகவல் வெறும் வதந்தி எனத் தெரிய வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோஹாவுக்கு செல்லவிருந்த 134 பயணிகளின் உடமைகளும் தீவிரமாக சோதனை இடப்பட்டு அதன் பின்னரே அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
இந்த குழப்பம் காரணமாக சுமார் 1 மணி ேநர தாமதத்திற்குப் பின்னர் தோஹா செல்ல வேண்டிய விமானம் கிளம்பிச் ெசன்றது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications