கருணாநிதி மீதான உரிமை மீறல் நிராகரிப்பு: அதிமுக வெளிநடப்பு
சென்னை:முதல்வர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினையை நிராகரித்ததை கண்டித்து சட்டசபையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபை இன்று தொடங்கியதும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, முதல்வர் கருணாநிதி கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையை நிராகரிப்பதாக கடிதம் எழுதியுள்ளீர்கள். அது ஏன் என்பதை விளக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டார்.
அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் விளக்கம் அளித்தார். உரிமை மீறல் இருப்பதாக தெரியவில்லை. எனவேதான் நிராகரிக்கப்பட்டது என்றார் சபாநாயகர்.
ஆனால் அதை ஏற்காத பன்னீர்செல்வம் இதுகுறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து அதிமுகவினர் வெளிநடப்புச் செய்து வெளியேறினர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவைக்குத் திரும்பினர்.