Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயுர்வேத கிளினிக்கில் விபச்சாரம்-டிவி நடிகை உள்பட 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஆயுர்வேத கிளினிக்கில் விபசாரம் செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தி.நகரில் உள்ள நேச்சுரல் கிளினிக்கில் விபசாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைந்தது. இதையடுத்து கஸ்டமர்கள் போல போலீஸார் அங்கு சென்றனர். அப்போது அங்கு வரவேற்பறையில் சோமு, சுதா என்ற இருவர் இருந்தனர்.

Meena (left extreme) and Sujatha (in blue dress) with customers

அப்போது அவர்கள் போலீஸாரிடம் சாதாரண மசாஜ் செய்ய ரூ. 3,000. நிர்வாண மசாஜ் செய்ய ரூ. 5,000 எது வேண்டும் உங்களுக்கு என்று கேட்டனர்.

ரூ. 5,000 கொடுத்து விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் என்பவர் உள்ளே சென்றார். அங்கு ஆந்திராவைச் சேர்ந்த டிவி நடிகை சுஜாதா (25) உட்பட 2 பெண்கள் இருந்தனர். அப்போது சுஜாதா நிர்வாண மாசஜ் செய்த பிறகு உல்லாசமாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு தனி கட்டணம் என்று கூறிக்கொண்டே முருகனின் ஆடையை கழற்றினர்.

Selvakumar, Somu and Joshp

அப்போது முருகன் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் உள்ளே நுழைந்து சோமு, செல்வக்குமார், ஜோசப் பிரகாஷ் ஆகிய முன்று பேரை கைது செய்தனர். இவர்களில் செல்வக்குமார் என்பவர் தூத்துக்குடி என்ற படத்தில் நடித்தவர்.

மேலும் டிவி நடிகை சுஜாதா, கேரளாவைச் சேர்ந்த மீனா (22) ஆகியோரை போலீஸார் மீட்டு இருவரையும் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டரை நடத்தி வந்த சித்த மருத்தவர் தர்மராஜ் என்ற ராமலிங்கம் என்பவரும் சுதா என்பவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+