For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம்:நாரை கிடைக்காததால் புறாவை பறக்க விட்டனர்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:மதுரை சித்திரைத் திருவிழால் சுந்தரராஜ பெருமாள் மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம் தரும் நிகழ்ச்சிக்கு நாரை கிடைக்கவில்லை. இதையடுத்து புறாவை பறக்கவிட்டனர் விழா நிர்வாகிகள்.

கள்ளழர் திருக்கோலத்தில் சுந்தரராஜ பெருமாள் வைகையில் இறங்கினார். பின்னர் வண்டியூர் கோவிலில் எழுந்தருளிய பெருமாள் பின்னர் வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோச்சனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விமோச்சனம் கிடைத்ததற்கு அடையாளமாக நாரை பறக்க விடப்படுவது வழக்கம். இது தான் நூற்றாண்டு காலமாக நடந்து வருகிறது. ஆனால், இம்முறை நாரை எங்குமே கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து புறாவை பறக்கவிட்டு அட்ஜஸ்ட் செய்தனர்.

முன்பெல்லாம் மதுரையை சுற்றி கண்மாய்களும், ஏரிகளும் இருந்தன. இதனால் நாரை, கொக்கு என ஏகப்பட்ட பறவைகள் பறந்து திரியும். இப்போது கண்மாய்கள் எல்லாம் கட்டிடங்களாகிவிட்டன. ஏரிகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.

இதனால் மதுரையில் நாரை கூட கிடைக்காத அவலம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X