பி.ஐ.பி. அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு!
சென்னை:சென்னையில் உள்ள பத்திரிகைத் தகவல் தொடர்பு அலுவலகத்தில் (பி.ஐ.பி.) இரு உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் வைத்தே காம லீலைகளில் ஈடுபட்டதாகவும், லஞ்சம் வாங்கிதாகவும் வந்த தகவல்களையடுத்து அந்த அலுவலகத்தில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிக்கைத் தகவல் தொடர்பு அலுவலகம் உள்ளது.
மத்திய தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் இந்த அலுவலகத்தில் துணை இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றும் ஜெயராஜ், இயக்குநர் வெற்றிச்செல்வன் ஆகியோர் மீது சிபிஐக்கு பல்வேறு புகார்கள் போயின.
அலுவலகத்தில் வைத்தே காம லீலைகளில் ஈடுபடுவதாகவும், ஊழியர்களுக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்க பணம் கேட்பதாகவும் புகார்கள் போயின.
சமீபத்தில் இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்குவதற்காக இருவரும் ரூ. 1 லட்சம் கேட்டுள்ளனர்.
இதுதவிர அலுவலகத்திற்குச் சம்பந்தம் இல்லாத பெண்களை, அலுவலகத்திற்கே அழைத்து வந்து காம லீலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களது கள்ளத் தொடர்புகளை அலுவலகத்தில் வைத்துப் பராமரித்து வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து தட்டிக் கேட்ட ஊழியர்களை தொலை தூரங்களுக்கு இந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளனர்.
இதுதவிர அரசு வழங்கும் பத்திரிக்கைப் படி, தொைலபேசி படி, வாகன படி உள்ளிட்டவற்றிலும் இவர்கள் பெருமளவில் மோசடி செய்துள்ளனர். மேற்படி புகார்களைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பி.ஐ.பி. அலுவலகத்தில் ரெய்டு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
-
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications