For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.ஐ.பி. அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னையில் உள்ள பத்திரிகைத் தகவல் தொடர்பு அலுவலகத்தில் (பி.ஐ.பி.) இரு உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் வைத்தே காம லீலைகளில் ஈடுபட்டதாகவும், லஞ்சம் வாங்கிதாகவும் வந்த தகவல்களையடுத்து அந்த அலுவலகத்தில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிக்கைத் தகவல் தொடர்பு அலுவலகம் உள்ளது.

மத்திய தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் இந்த அலுவலகத்தில் துணை இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றும் ஜெயராஜ், இயக்குநர் வெற்றிச்செல்வன் ஆகியோர் மீது சிபிஐக்கு பல்வேறு புகார்கள் போயின.

அலுவலகத்தில் வைத்தே காம லீலைகளில் ஈடுபடுவதாகவும், ஊழியர்களுக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்க பணம் கேட்பதாகவும் புகார்கள் போயின.

சமீபத்தில் இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் வழங்குவதற்காக இருவரும் ரூ. 1 லட்சம் கேட்டுள்ளனர்.

இதுதவிர அலுவலகத்திற்குச் சம்பந்தம் இல்லாத பெண்களை, அலுவலகத்திற்கே அழைத்து வந்து காம லீலைகளில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களது கள்ளத் தொடர்புகளை அலுவலகத்தில் வைத்துப் பராமரித்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து தட்டிக் கேட்ட ஊழியர்களை தொலை தூரங்களுக்கு இந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்துள்ளனர்.

இதுதவிர அரசு வழங்கும் பத்திரிக்கைப் படி, தொைலபேசி படி, வாகன படி உள்ளிட்டவற்றிலும் இவர்கள் பெருமளவில் மோசடி செய்துள்ளனர். மேற்படி புகார்களைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பி.ஐ.பி. அலுவலகத்தில் ரெய்டு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X