மாலையிலும் இனி புற நோயாளிகள் பிரிவு!
சேலம்: அரசு மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவு 6 மணிநேரம் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பல், கண், காது, மூக்கு தொண்டை மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரிவுகளில், காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டுமே புறநோயாளிகள் பிரிவு செயல்படுகிறது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் மாலை நேரத்தில் புறநோயாளிகள் பிரிவு இயங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து புற நோயாளிகள் பிரிவுகளை 6 மணி நேரம் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அரசு மருத்துவமனைகளில் சாதாரண மற்றும் சிறப்பு சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவு கண்டிப்பாக காலை 8 மணி முதல் 12 மணிவரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும் செயல்பட வேண்டும். இதை கடைபிடிக்காத மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications