இந்தியாவால்தான் ஈழப் பிரச்சினைக்குதீர்வு காண முடியும்-ரணில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:இந்தியா தலையிட்டால் மட்டுமே ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.துபாயிலிருந்து கொழும்பு திரும்பும் வழியில் இன்று காலை சென்னைக்கு வந்தார் ரணில். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளார் அதிபர் ராஜ பக்ஷே.
இலங்கையில் நிலைமை மோசமாக உள்ளது. மக்களிடையே பெரும் பதட்டமும், பயமும் நிலவி வருகிறது.
இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தலையிட்டால்தான் முடியும். இல்லாவிட்டால் பிரச்சினையைத் தீர்க்க இயலாது.
நான் இலங்கை சென்ற பின்னர் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளேன் என்றார் ரணில்.












Click it and Unblock the Notifications