ராஜ்யசபா தேர்தலில் மன்மோகன் சிங் போட்டி
குவஹாத்தி:பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவுக்கு மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக செவ்வாய்க்கிழமை அவர் குவஹாத்தியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் தற்போது அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். அவரது பதவிக்காலம் ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து மீண்டும் ராஜ்யசபாவுக்கு போட்டியிடவுள்ளார்.
இதற்காக செவ்வாய்க்கிழமை அவர் குவஹாத்தி செல்கிறார். அன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார். கடந்த 3 முறையாக அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மன்மோகன் சிங். தற்போது 4 வது முறையாக ராஜ்யசபா எம்.பி.தேர்தலில் போட்டியிடுகிறார்.
மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அடிப்படையில் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் இதுவரை நேரடித் தேர்தலில் போட்டியிடவில்லை, தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications