கருணாநிதி பொன்விழா செலவுதிமுகவே ஏற்கும்-ஆற்காடு வீராசாமி
சென்னை:முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிக்கான செலவுகளை திமுக மற்றும் தோழமைக் கட்சிகளே ஏற்கும் என திமுக பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை திமுகவும், தோழமைக் கட்சிகளும் ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படியே நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதேபோல பேரவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான செலவுகளையும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளே ஏற்கின்றன என்று கூறியுள்ளார்.
ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், ஊழல் வழக்குகளை சந்திக்கொண்டிருக்கிற ஜெயலலிதாவுக்குப் பிறர் பற்றி பேசவோ, எழுதவோ தகுதியில்லை.
கருணாநிதி குடும்பம் 2 விமானங்களை வாங்கியிருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். விமானங்களை வாங்கியிருப்பது ஒரு தனியார் நிறவனம். அந்த நிறுவனத்திற்கும் முதல்வர் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அரசியல் ரீதியாக அவர் மீது எந்த குற்றமும் சொல்ல முடியாததாலும், தனியார் நிறுவனத்தின் மீது பொறாமை கொண்டும் அறிக்கை விடுவது ஏன்.
உங்களிடம் பணியாற்றிய அதிகாரி திருமண வரவேற்பிற்கு கோடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்துவிட்டு சென்ற செலவு ரூ.60 லட்சம். இந்த பணம் எங்கிருந்து வந்தது.
எண்ணற்ற ஊழல் வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கிற அவருக்கு பிறறை பற்றி பேசவோ, எழுதவோ அல்லது பிறர் எழுதிகொடுத்த அறிக்கையில் கையெழுத்திடவோ எந்த நியாமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.