இலங்கை அமைதி ஒப்பந்தம்: கைவிட அரசுமுடிவு?!
கொழும்பு:புலிகளுடன் நார்வே மத்தியஸ்தில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சரும், பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான ககிலிய ரம்புகெவெல்லா நிருபர்களிடம் கூறுகையில்,
நாங்கள் அமைதி உடன்பாட்டை மதிக்கிறோம். ஆனால், இந்த உடன்பாடு தொடர்ந்து மீறப்பட்டு வருவதைப் பார்த்தால் அதை தொடர்ந்து அமலாக்குவதா அல்லது அதை கைவிடுவதா என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இது குறித்து புலிகளுடன் பேச வேண்டியது நார்வேயின் வேலை.
அமைதி உடன்பாடு அமலில் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியானால், புலிகளைத் தாக்க அரசுக்கு முழு உரிமை உள்ளது. இந்த உரிமையை அரசு விட்டுத் தராது.
கடந்த 2002ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இதுவரை அது 10,000 முறை மீறப்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்தம் செத்துவிட்டதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும் என்றார்.
வன்னி பகுதியை விமானங்களைக் கொண்டு உளவு பார்ப்பது ஒப்பந்தந்தை மீறிய செயல் என நார்வே அமைதி கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனரே என்று கேட்டதற்கு, அது குறித்துப் பேச அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
சமீபகாலமாக விமானத் தாக்குதலும் புலிகள் நடத்தி வருவதால் வான் வழியாக உளவு பார்ப்பதை அதிகரிக்கப் போகிறோம்.
புலிகளின் விமானங்களை எதிர்கொள்ளும் வகையில் விமானப் படையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ககிலியா.
2002ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி எந்தத் தரப்பாவது ஒப்பந்ததை கைவிட முடிவு செய்தால் 14 நாள் நோட்டீஸ் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மீது விமானங்கள் தாக்குதல்:
இதற்கிடையே இலங்கை ராணுவ விமானங்கள் இன்று கிளிநொச்சி மீது தாக்குதல் நடத்தின.
புலிகளின் பயிற்சி முகாம்களைத் தாக்கியதாக விமானப் படை கூறியுள்ளது.
மிக் விமானங்கள் வாங்கிய இலங்கை:
இந் நிலையில் புலிகளின் விமானங்களை வானிலேயே தாக்கி அழிக்க மிக்-21 ரக விமானங்களை இலங்கை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications