துரோகத்தை வென்ற வைகோ- மதிமுகவுக்குஜெ. பிறந்த நாள் வாழ்த்து
சென்னை:மதிமுக ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆவதையொட்டி கட்சிப் பொதுச் செயலாளர் வைகோவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதிமுக ஆரம்பித்து 13 ஆண்டுகள் நிறைந்து 14வது ஆண்டு பிறந்துள்ளது. இதையொட்டி வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், மதிமுக பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து, துரோகத்தை முறியடித்து, அதன் தீர்க்கமான பாதையில், லட்சியம் குன்றாமல் நம்பிய பயணத்தில் இம்மி அளவு கூட பிசகாமல் நடைபோட்டு,
இன்றோடு 13 ஆண்டுகள் நிறைவடைந்து மக்கள் பணியில் 14ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்கள் போர்க்குணமும், மதிமுகவின் வீரமும், தீரமும் போற்றுதலுக்கு உரியதாகும். உழைப்பின் வெளிச்சமும், வெற்றியின் விலாசமும் தங்களுக்கும் மதிமுகவுக்கும் கிடைத்திட எனது இதயமார்ந்த நல் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications