சந்தன கடத்தலில் வீரபாண்டி குடும்பம்:ஜெ புகார்-வனத்துறை அமைச்சர் மறுப்பு
சென்னை:வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் சந்தன கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருப்பதை தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் வன்மையாக மறுத்துள்ளார்.
செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆற்காடு பகுதியில் உள்ள வசம்பாடி என்ற இடத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் இந்த சந்தன கடத்தல் நடந்தது.
இந்த எஸ்டேட்டின் உரிமையாளர்களிடையே 1995ம் ஆண்டு பிரச்சனை எழுந்த போது அைதத் தீர்க்க நீதிமன்றம் இருவரை பார்வையாளர்களாக நியமித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வனத்துறையினர், காவல்துறையினருடன் இணைந்து ஆற்காடு எஸ்டேட்டிலிருந்து லாரியில் கடத்த முயன்ற 5,560 கிலோ சந்தன கட்டைகளை கைப்பற்றினர்.
இதையடுத்து எஸ்டேட் மேலாளர் ஜெயம்கொண்டான் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 34 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அஸ்தம்பாடி குடோனில் வைக்கப்பட்டது.இது வழக்கு குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது சம்பவம் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் நடந்தது. வனப்பகுதியில் அல்ல. கடந்த அதிமுக ஆட்சியிலும் இதே எஸ்டேட்டில் இருந்து சந்தன கட்டைகள் கடத்தப்பட்டன.
அப்போது அதிமுக அரசு கையாண்ட முறைகளை தான் இந்த அரசும் செய்து வருகிறது.
ஆனால், முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இதில் தேவையில்லாமல் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரை இழுத்துவிட்டு ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தினமும் ஒரு பொய்யான தகவலை அளித்து வரும் ஜெயலலிதாவின் உள்நோக்கம் என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே என்று கூறியுள்ளார் செல்வராஜ்.
-
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications