வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியாடோணி(93), திணேஷ் கார்த்திக்(58) அபாரம்
டாக்கா:வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோணி அபாரமாக ஆடி 93 ரன்களைக் குவித்தார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று டாக்காவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் அந்த அணியை சந்தித்தது.
மழை காரணமாக தலா 47 ஓவர்களைக் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய வங்கதேசம் பின்னர் அடித்து ஆடி விரைவாக ரன்களைக் குவித்தது.
47வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வங்கதேசம் 250 ரன்களைக் குவித்தது. ஜாவேத் ஒமர் 80 ரன்களும், சகீபுல் ஹசன் 50 ரன்களும் எடுத்தனர். தமீம் இக்பால் 45 ரன்களைச் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் திணேஷ் மோங்கியா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிலை தடுமாறி விளையாட ஆரம்பித்தது. விரைவாக விக்கெட்டுக்களை இழந்தாலும் டோணி மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் விக்கெட் சரிவை நிறுத்தி வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
டோணி சிறப்பாக ஆடி 93 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக திணேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 58 ரன்களைக் குவித்தார்.
இறுதியில் 47 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 253 ரன்களை சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது.
வங்கதேசம் இப்போட்டியில் தோற்றாலும் கூட அந்த அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 எனற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
2வது மற்றும் 3வது போட்டிகள் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளன.