கராச்சியில் பயங்கர வன்முறைதுப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலி
கராச்சி:பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று அதிபர் முஷாரப்பின் ஆதரவாளர்களுக்கும், பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில், 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து இப்திகார் செளத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நீதித்துறையினர் கடும் கொந்தளிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில், கராச்சியில், செளத்ரி ஆதரவாளர்களும், அதிபர் முஷாரப்பின் ஆதரவாளர்களும் தனித் தனியாக பேரணிகளை நடத்தினர். இதனால் அங்கு நேற்று காலை முதலே பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், இரு தரப்பு ஆதரவாளர்களும் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.
செளத்ரி ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில், திடீரென முஷாரப்புக்கு ஆதரவாக செயல்படும் ஒரு பிரிவினர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். பதிலுக்கு செளத்ரி ஆதரவாளர்களும் துப்பாக்கிளால் சுட அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியது.
தாறுமாறாக இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 30 பேர் பரிதாபமாக இறந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்தப் பகுதி முழுவதும் ரத்தம் சிதறி பயங்கரமாக காட்சி அளித்தது. பல வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது.
முன்னதாக பேரணியில் கலந்து கொள்வதற்காக செளத்ரி கராச்சி வந்தார். விமான நிலையத்திற்கு அவர் வந்தபோது கலவரம் நடந்து கொண்டிருந்ததால் அவரால் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.
வெளியில் செல்வது ஆபத்தானது என்று போலீஸார் எச்சரித்ததால் அவர் விமான நிலையத்திலேயே தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து இஸ்லாமாபாத் திரும்பிச் சென்றார்.
கராச்சி வன்முறையால் பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பாக உள்ளது. நிலைமையை சமாளிப்பது குறித்து அதிபர் முஷாரப், பிரதமர் செளகத் அஜீஸ் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications