ஜனாதிபதி பதவி- சுஷில் குமார் ஷிண்டேவைநிறுத்த காங் கூட்டணி-இடதுசாரிகள் முடிவு?
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டேவை நிறுத்த காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவெடுத்துள்ளன.
அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் வேறு ஒருவரை அடையாளம் காணும் பணியில் அந்தக் கட்சி தீவிரமாகியுள்ளது.
![]() |
இது தொடர்பாக இடதுசாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜனாதிபதி பதவிக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த இடதுசாரிகள் விரும்பின. ஆனால், இதற்கு காங்கிரஸ் ஆதரவு தரவில்லை.
இந் நிலையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மின்துறை அைமச்சர் சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.
இதில் முகர்ஜியை உச்சத்தில் அமர வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. அதே போல பாஜக ஆட்சியின்போது அவர்களுடன் நட்பு பாராட்டிய கரண் சிங்கையும் காங்கிரஸ் ஜனாதிபதியாக்க விரும்பவில்லை.
அதே நேரத்தில் சோனியா ஆதரவாளரும், ராஜிவ் குடும்பத்துக்கு நெருக்கமானவரும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஷிண்டேவை ஜனாதிபதியாக்க சோனியா தீவிரம் காட்டி வருகிறார்.
ஷிண்டே மூத்த தலித் தலைவர் என்பதும் அவருக்கு சாதகமான அம்சமாகும். அவரை மாயாவதியும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும் இடதுசாரிக் கட்சிகளும், திமுக, லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தலைவர்களும் தலித் தலைவரான ஷிண்டேவுக்கு ஆதரவு தர மகிழ்ச்சியுடன் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக நேற்று சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் பரதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, பார்வார்டு பிளாக் கட்சி பொதுசெயலாளர் விஸ்வாஸ் ஆகியோர் சந்தித்து பேசினார்.
அப்போது ஷிண்டேவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
காங்கிரஸ்காரராக இருந்தாலும் கவர்னர் பதவியில் இருந்தபோது நடுநிலையோடு நடந்து காட்டியவர் ஷிண்டே.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷிண்டேவை நிறுத்தினால் அவரை பாஜகவும் எதிர்க்க முடியாத சூழலுக்குத் தள்ளப்படலாம் என காங்கிரஸ் கணக்கு போடுகிறது.













Click it and Unblock the Notifications