ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்
சென்னை:திமுகவிலிருந்தும், மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் தயாநிதி மாறனை நீக்கக் கோரி திமுக நிர்வாகக் குழு முதல்வர் கருணாநிதிக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி.
தினகரன் கருத்துக் கணிப்பு ஏற்படுத்திய சலசலப்பு, அதைத் தொடர்ந்து மதுரையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை ஆகியவற்றால் தயாநிதி மாறனுக்கு திமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து நேற்று மாலை திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தயாநிதி மாறனை என்ன செய்வது என்று முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் இறுதியில், தயாநிதி மாறனை அமைச்சரவையிலிருந்து நீக்குவது என்றும், கட்சியிலிருந்தும் நீக்குவது எனவும், இதுதொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பவம் தீர்மானிக்கப்பட்டு அதை அமலாக்கும் முடிவை கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
நிர்வாகக் குழுக் கூட்டம் சுமார் இரண்டே கால் மணி நேரம் நடந்தது. இக்கூட்டத்தில் தயாநிதி மாறனை நீக்குவது உள்ளிட்ட ஐந்து முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகக் குழு முடிவு தெரிய வந்தவுடன் இரவு பத்து மணியளவில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பினார் தயாநிதி மாறன்.
முன்னதாக பிரதமரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன் பின்னர் பேக்ஸ் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications