தயாநிதி மாறன் ராஜினாமா: பிரதமர் ஏற்பு
டெல்லி:மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ள தயாநிதி மாறனின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டு அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியையும், அவரது குடும்பத்தையும் மாறன் சகோதரர்கள் புறக்கணித்தனர்.
இந்த நிலையில், திமுக நிர்வாகக் குழுக் கூடி தயாநிதி மாறன் மீது கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்யப்பட்டது. மேலும் அவரது மத்திய அமைச்சர் பதவியைப் பறிமுதல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பிரதமருக்கும் ராஜினாமாக் கடிதத்தை அனுப்பி வைத்தார்.
தயாநிதியின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டார். அவரது கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரச்சாமி, அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிக் கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடமும் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications